tamilnadu

img

உத்தரப்பிரதேசத்தில் அனைவரும் தேர்ச்சி

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில்  8 ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யும்படி அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.உத்தரப்பிரதேசத்தில் மார்ச் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை அரசு ஆரம்பநிலை பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இறுதி தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவுவதை சுட்டிக்காட்டி, ஏப்ரல் 2 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவர்களையும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அடைய செய்யும்படி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

;